Sunday, August 24, 2008

இது தெரியுமா உங்களுக்கு...!


ஜாக் டிவி... ஜாக் டிவி என்று ஒரு லோக்கல் கேபிள் சேனல் ஓடிக்கொண்டிருக்கிறது வட தமிழ் மாவட்டங்களில்.

சென்னை தொடங்கி, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ரொம்பப் பிரபலம் இந்த சேனல்.

ராஜ் டிவிக்காரர்களையே மிரட்டி, கண்ணில் விரல்விட்டு ஆட்டிய (பல நாட்கள் தலைமறைவு வாழக்கை வாழ்ந்திருக்கிறார்கள் ராஜ் டிவிக்காரர்கள், இந்த தாதா சேனலின் அடக்குமுறைக்கு பயந்து!) அந்த ‘மீடியா பயங்கரவாதிகள்’, இந்த ஜேக் டிவியையும் விலை பேசினார்கள்.

ஜேக் ஜெயராமன் மசிவதாக இல்லை... இன்னும் ஜோராக பிரபல நடிகர்களை அழைத்து லைவ் ஷோ நடத்த ஆரம்பித்துவிட்டார் ஜேக் டிவியில்.

அடுத்த அஸ்திரத்தை ஏவினார்கள். இது ஆளையே காலி பண்ணும் அஸ்திரம்.
ரூ.12 கோடிக்கு அவர் நிலமோசடி செய்துவிட்டதாக தங்கள் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் போட்டுத் தாக்கி வருகிறார்கள்.

இந்த நவீன வன்முறைக்கு பயந்து அவர் தலைமறைவாகத் திரிய வேண்டிய நிலை. இத்தனைக்கும் ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர் இந்த ஜெயராமன். ராணிப்பேட்டை காந்தியின் பார்ட்னர். வேறு வழியில்லாமல், ரூ.3.5 கோடி பணத்தை ரொக்கமாகக் கட்டி முன்ஜாமீன் எடுத்திருக்கிறார், இந்த மீடியா பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிக்க!

மக்கள் எப்போதும் போல் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்!

No comments: