Friday, August 22, 2008

நண்பர்களே... ஒரு நிமிஷம்!


தமிழகம் முழுதும் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்னையில் வரும் 27ஆம் தேதி கூடி அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக நண்பர் சுந்தர் (http://www.onlyrajini.com)) ஒரு சிறப்புச் செய்தி கொடுத்துள்ளார்.

இன்றைய மாலைப் பத்திரிகைகள் மற்றும் தளங்களுக்கு அநேகமாக இதுதான் முக்கியச் செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உலகில் யாருக்குமே இல்லாத மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது ரஜினிக்குதான். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பதிவு செய்யப்பட்ட, படாத மன்றங்கள். ஒரு மன்றத்துக்கு சராசரியாக 100 பேர் என்று வைத்துக் கொணாடல் கூட எங்கோ போகிறது கணக்கு. இவர்களைவிட நான்கைந்து மடங்கு பொதுமக்கள் ரஜினி மீது அபிமானம் வைத்திருக்கிறார்கள்.

அதாவது இந்த அபிமானம் அப்படியே திரையரங்கில் பணமழையாகப் பொழிய வேண்டும் என கணக்குப் போடக்கூடாது.

இவர்களுக்கெல்லாம் ரஜினியைப் பிடிக்கும். படம் பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப பார்த்து ரசிப்பார்கள்.

குசேலன் பேனர்கள் கிழிக்கப்பட்ட போது, குசேலனுக்கு எதிராக பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போது எங்கே போனது இந்தப் பட்டாளம் என்று ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்துவிட்டன. ரஜினியின் அரசியல் நிலைப்பாடு, அவர் படம் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துவிட்டதில் ரசிகர்கள் ஒருவித சோர்வில் இருந்தது உண்மைதான்.

அதேநேரம் தலைமை மன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டுதான் விகடன் எரிப்புத் திட்டத்தைக் கூட ரசிகர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்ததக் கட்டுப்பாடுதான் இன்றைக்கு மிக முக்கியம். அதே நேரம் தங்கள் உணர்வுகளை நியாயமான வழிகளில் வெளிப்படுத்துவதிலும் தவறில்லை. இந்த நடவடிக்கைகள் ரஜினியைப் புண்படுத்தும் விதத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடந்த முறை காரைக்குடியில் கூட்டம் போட்டு தனிக் கட்சி அறிவித்த மாதிரி எதுவும் செய்து விடக்கூடாது. இன்னொன்று ரஜினி அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்று வற்புறுத்துவதும் இப்போதைக்கு வேண்டாம்.

ரசிகர்கள் தங்கள் ஒற்றுமையை, அவர் மீதுள்ள நம்பிக்கையை அழுத்தமாக உணர்த்தும் விதத்தில் இக்கூடத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆவேசம் வேண்டாம்... விவேகமாக இருந்தால் ரஜினிக்கு எதிராக நடக்கும் இந்த சதிகளையும் எளிதில் சமாளிக்கலாம்!

No comments: