Tuesday, September 16, 2008

எச்சரிக்கை -3: ரஜினி... அரசியல்... சத்தியநாராயணா!


இதில் நமது கருத்தென்று எதுவும் இல்லை. ரஜினி மன்றங்களின் தலைவர் சத்திய நாராயணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:

ரஜினி தன் மன்றத் தினரைச் சந்திப்பாரா மாட்டாரா... அல்லது வழக்கமான எதிர்பார்ப்பைக் கிளப்பும் வேலையா இது என்று மீடியாவில் விவாதம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவரான சத்திய நாராயணா கொடுத்திருக்கும் பதில் இது, அதுவும் ரஜினியின் உத்தரவோடு!

இந்நேரம் பல நிர்வாகிகளுக்கு தலைமை மன்றத்திலிருந்து ரஜினியுடனான சந்திப்பு குறித்த உத்தரவு பறந்திருக்கக் கூடும். இன்னும் 20 நாட்கள்தான் உள்ளன, ரசிகர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள.

ரஜினி ரசிகதர்களைப் பொருத்தவரை இந்த தீபாவளி வாணவேடிக்கை முழங்கும் உற்சாகத் திருநாளாகத் திகழ்வது சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகளில் இருக்கிறது. ஆனாலும் சத்திய நாராயணாவின் பேட்டியில் பொதிந்துள்ள உள்ளர்த்தம், அவர்களை இப்போதே தீபாவளி கொண்டாட வைத்துள்ளது.
நல்லது நடக்கட்டும்...

அரசியலில் ரஜினி இறங்க நீங்கள்தான் முட்டுக்கட்டையா...?

...அரசியலில் தலைவர் உடனே இறங்கவேண்டும் என ஆசைப்படும் சில மன்ற நிர்வாகிகள், அதே ஸ்பீடில் தலைவரிடம் இதுபற்றி நான் பேசி ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியல் விஷயத்தில் தன்னிச்சையாக நான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. இதுதான் நிதர்சனம்.

ஆனால், இதை என்னுடைய இயலாமையாகவோ, திட்டமிட்ட மெத்தனமாகவோ சிலர் நினைக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தலைவர் அரசியலுக்கு வந்தால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான்.

அரசியலைப் பொறுத்தமட்டில் தலைவர் யாரையும் பாதிக்காத முடிவைத்தான் எடுப்பார். கடைக்கோடி ரசிகனின் நிலைப்பாடு வரை அவர் யோசிப்பார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர் செயல்பட மாட்டார். இதையெல்லாம் புரிந்துகொள்ளாத ஒருசில ரசிகர்கள் ஆதங்கப்பட்டால் நான் என்ன செய்வது?

அக்டோபர் புரட்சியாக, ரொம்ப நாளைக்கப்புறம் ரசிகர்களை ரஜினி சந்திக்கப் போவதாகச் சொல்வது உண்மைதானே…?

உண்மைதான். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகிகளையும் ஒருசேர தலைவர் இதுநாள் வரை சந்தித்ததில்லை. ஆனால், அக்டோபர் முதல் வாரத்தில் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி இருக்கிறார்.
முதல் நாள் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், அடுத்த நாள் இதர மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் சொல்லி இருக்கிறோம். எந்திரன் ஷ¨ட்டிங்கால் ஒருசில நாட்கள் தள்ளிப் போனாலும் இந்த முறை தலைவர் கண்டிப்பாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார். அதில் மாற்றமே இல்லை.

சிரஞ்சீவியைப் போல் கட்சி ஆரம்பிப்பதற்கான முன்னோட்டமாக அந்த சந்திப்பு இருக்குமா?

ஓய்வாக இருக்கிற நாட்களில் தலைவர் முடிந்த மட்டும் மன்றத்தினரைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். ஒரு கட்டத்தில் வந்தவர்களே திரும்பத் திரும்ப வந்ததைக் கண்டு, தன்னை நேரில் பார்க்கவே முடியாது என ஏங்குகிற ஆட்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் எனச் சொல்வார். ஆனால், அதற்குப் பின்னர் தலைவருக்கு ஓய்வு கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது.

இப்போது அவர் அனைவரையும் சந்திப்பதாகச் சொல்லி இருப்பதில் எல்லோருக்குமே மிகுந்த சந்தோஷம். ஆனால் அரசியல் குறித்தோ, வேறேதும் விவகாரங்கள் குறித்தோ அவர் என்ன பேசப் போகிறார் என்று இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தலைவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதன்படி நடக்க மட்டும்தான் எனக்குத் தெரியும்., என முடிந்துள்ளது அந்தப் பேட்டி!

ச்சும்மா அதிருதில்ல.... எனும் தலைப்பில் முன்பு வெளியான பதிவை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளவும்!

குறிப்பு: சத்தியநாராயணாவுடன் இரு தினங்களுக்கு முன் நாம் பேசியதன் அடிப்படையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மேலும் சில பதிவுகளும் வரவிருக்கின்றன.

3 comments:

Anonymous said...

சுந்தர், இத நான் ஏற்கனவே கமெண்ட்ஸ்ல பதிவு செய்திருக்கிறேன் இருந்தாலும் 'கேணக்கூ' என்கிற வார்த்தையின் ஒரே உதாரணம் இந்த வீடியோதான்.

http://www.youtube.com/watch?v=Im7jacsKVR8

Anonymous said...

hi vino excellent article.according to me lot of good things is going to happen for our thalaivar

Unknown said...

Hi Vinojasan,

No updates from you for past 2-3 days. Am sure that many, like me, are eagerly waiting for some updates from you.