Tuesday, September 9, 2008

என் இனிய இயந்திரா!


எழுத்தாளர்களில் சூப்பர் ஸ்டார் யாரென்றால், சந்தேகமில்லாமல் அமரர் சுஜாதாதான் என்றே அனைவரும் சொல்வார்கள். அதிகமாகக் கதை எழுதியதால் கிடைத்ததல்ல இந்தப் பட்டம். நடிப்புலக சூப்பர் ஸ்டாரான ரஜினி போலவே, மிகச் சிறந்த மனிதராக அவர் வாழ்ந்ததுதான். வெறும் தொழில் திறமை மட்டுமே யாரையும் உச்சத்துக்குக் கொண்டு வருவதில்லை.

நட்சத்திர எழுத்தாளராக மாறிய பின் சுஜாதா எழுதிய மிகச் சிறந்த விஞ்ஞான – அரசியல் நாவல் என் இனிய இயந்திரா. அநேகமாக தமிழில் எழுதப்பட்ட முதல் விஞ்ஞான நாவல்.

தொடர்கதையாக ஒரு ஆண்டுக்கும் மேல் விகடனில் வெளிவந்த இந்த நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு அனைவரையும் திகைக்க வைத்துவிட்டது.

அதன் பலன், ஊரிலிருக்கிற சிறிய பெரிய எழுத்தாளர்களெல்லாம் ரோபோ கதைகள் என்ற பெயரில் ஏகப்பட்ட கதைகளை எழுதிக் குவித்தனர். மாதாமாதம் பாக்கெட் நாவல்களாக வெளிவந்து ரோபோவை மலிவாக்கத் தொடங்கின.

தமிழ் நாவல் இலக்கியத்தில் பல புரட்சிகளுக்கு முன்னோடி சுஜாதாதான் என்பதால் இதுவும் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது.

மிகுந்த விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருந்த கதையை சட்டென்று ஒரு கட்டத்தில் நிறுத்தினார் சுஜாதா, அதன் இரண்டாம் பாகத்தை ஒரு இடைவெளிக்குப் பிறகு தொடங்குவதாக உத்தேசம் என்ற அறிவிப்புடன்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முற்றிலும் வேறு ஒரு ஸ்டைலில் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார், மீண்டும் ஜீனோ எனும் பெயரில்.

இந்த இரு கதைகளுமே பலருக்கும் நன்கு பரிச்சயமானவைதான். ஆனால் புத்தக வடிவில் படிக்கும் ஆர்வம் குறைந்த ஒரு தலைமுறையுடன்தான் நாம் வசித்துக் கொண்டிருக்கிறோம். எனவே ஆன்லைனில் அந்தக் கதையையோ அதன் சுருக்கத்தையோ சொல்லி, எந்திரன் – தி ரோபோ படத்தின் எதிர்பார்ப்பை எந்த விதத்திலும் குறைக்க விருப்பமில்லை.

ரோபோக்கள் ஆளும் ஒரு யுகத்தில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள், மாற்றங்களை தனக்கே உரிய அங்கத – விஞ்ஞானம் கலந்த நடையில் சுஜாதா எழுதியிருக்கும் அழகே தனி.
தமிழில் கண்ணதாசனுக்குப் பிறகு, அத்தனை வலிமையான புதுமையான நடைக்குச் சொந்தக்காரர் சுஜாதா மட்டுமே.

அதுமட்டுமல்ல... தமிழ் இலக்கிய உலகில் தொடர்கதைகள் துவங்கும் முன் பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது மூன்று தருணங்களில்தான். அவை மூன்றுமே சுஜாதாவின் தொடருக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி கட்அவுட், பேனர் என அமர்க்களத்துடன் துவங்கிய கதை இது (இதற்கும் முன் சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம் நாவல்களுக்கும் கட் அவுட் வைத்தனர்).

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நட்சத்திரக் கதை எழுதப்பட்டதே நமது உச்ச நட்சத்திரத்துக்குத்தான் போலும்!

ரஜினியின் இமேஜ் மற்றும் அவரது ரசிகர்களின் விருப்பங்களைப் புரிந்து கொண்டு சிவாஜி எனும் பிரமாண்ட பொழுது போக்குப் படத்தைத் தந்த ஷங்கரும் சுஜாதாவும் கிட்டத்தட்ட ஒருமாத காலம் உட்கார்ந்து ரஜினிக்காகவே இந்த இரு நாவல்களையும் ஒரு திரைக்கதையாக்கினார்கள். கிட்டத்தட்ட வசனங்கள் முழுமை பெறும் தருவாயில்தான் சுஜாதா நம்மை விட்டுப் பிரிந்தார்.

சுஜாதா உருவாக்கிய என் இனிய இயந்திரா திரைக்கதை இன்னும் சற்று செம்மைப்படுத்தப்பட்டு ஹாலிவுட் தரத்துடன், எந்திரனாக வருகிறது.
அதேபோல, எந்திரன் என்ற இந்த தலைப்பை வைத்ததும் மறைந்த சுஜாதாதான். சிவாஜி திரைப்படத்தின் வெள்ளி விழா மேடையிலேயே இதை அவர் ஒரு யோசனையாக அறிவித்து நினைவிருக்கலாம்.
சுஜாதாவை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்திருந்த ஷங்கர், அவருக்கு செலுத்தும் மரியாதையாக ரஜினியின் ஒப்புதலுடன் வைத்திருக்கும் தலைப்பு இது.
தமிழக அரசும் இந்தத் தலைப்புக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

அனைவர் மனதுக்கும் இனிய எந்திரனாக அமையட்டும் இந்தப் படம்!

8 comments:

Anonymous said...

இந்தியர்களையும், தமிழர்களையும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் மத, ஜாதி, மொழி மற்றும் பல்வேறு பொய்க்காரணங்களை சொல்லி அப்பாவி மக்க்ளை பொது மக்களை பிரித்து த்ன் வயிறை நிறப்பிக்கொண்ட ஈனப்பிறவிகளை நாம் அறிவோம்! திரு.ரஜினி அவர்கள் 'மட்டுமே' உலகெங்கெலும் வாழும் தமிழினத்தை அட்லீஸ்ட் மூணு மணி நேரம் ஒன்றாக இணைத்தவர்! ரஜினி ஒரு உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை இணைக்கும் சக்தி ! பிரிக்கும் சக்தி அல்லவே! அதற்க்காகவே நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமி(ம)தம் கொள்கிறேன்.... ஒரே ஒருத்தன காட்டுங்க பார்ப்போம்???? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார் வராமல் போகிறார் !ஐ டொன்ட் கேர்.... ஆனால் ரஜினி மேஜிக் என்பதை அரசியலுக்காக இழக்க தயாரில்லை.... இப்படிக்கு - உண்மையான ரஜினி ரசிகன்

Anonymous said...

இந்தியர்களையும், தமிழர்களையும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் மத, ஜாதி, மொழி மற்றும் பல்வேறு பொய்க்காரணங்களை சொல்லி அப்பாவி மக்க்ளை பொது மக்களை பிரித்து த்ன் வயிறை நிறப்பிக்கொண்ட ஈனப்பிறவிகளை நாம் அறிவோம்! திரு.ரஜினி அவர்கள் ‘மட்டுமே’ உலகெங்கெலும் வாழும் தமிழினத்தை அட்லீஸ்ட் மூணு மணி நேரம் ஒன்றாக இணைத்தவர்! ரஜினி ஒரு உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை இணைக்கும் சக்தி ! பிரிக்கும் சக்தி அல்லவே! அதற்க்காகவே நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமி(ம)தம் கொள்கிறேன்…. ஒரே ஒருத்தன காட்டுங்க பார்ப்போம்???? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார் வராமல் போகிறார் !ஐ டொன்ட் கேர்…. ஆனால் ரஜினி மேஜிக் என்பதை அரசியலுக்காக இழக்க தயாரில்லை…. இப்படிக்கு - உண்மையான ரஜினி ரசிகன்

kppradeep said...

Sujatha is indeed a legend and has helped in BABA screen play as he has been thanked in that movie. He is a good friend of superstar(Has interviewed him for kumudam once)and says the only change in Rajini from his earlier days is his hair

Anonymous said...

Repeat:

SIVAJI THE BOSS!
KUSELAN THE KUBERAN!!
SULTAN THE WARRIOR!!!
YENDIRAN THE ROBO!!!!
RAJINI THE LIONKING!!!!
RAJINI THE HUMAN!!!!!!
THE NAME IS RAJINIKANT!!!!!!
Winning or loosing A LION IS ALWAYS A LION! The LION WILL ROAR MUCH MORE FERROCIOUS THAN EVER BEFORE!!!! OUR SINCERE THANKS TO MR.RAJINIKANT FOR GIVING US A CLEAN FAMILY ENTERTAINMENT FOR 30 YEARS... A RAJINIKANT MOVIE IS WORTH EVERY SINGLE PENNY/PAISE AND EVERY SECOND... MR.RAJINIKANT IS THE BEST FAMILY ENTERTAINER IN INDIA! WELCOME TO 2008!!!! IGNORE/DONT GIVE A DAMN ABOUT THOSE WHO LIVE IN STONE AGE! ---------- WHAT IS RAJINI MAGIC???----------- Ever since 15 August 1947, the people were divided in the name of RELIGION, LANGUAGE, CASTE, ECONOMIC STATUS, EDUCATION, YOU NAME IT by the EVIL PEOPLE for their own good------CAN ANY ONE SHOW ONE PERSON IN INDIA ( Other than our DEAREST uncle DR ABDUL KALAM who inspired every single Indian but we must remember there were evil souls who criticized our Uncle kalam himself. I am not comparing Uncle Kalam with Rajinikant AT ALL)--------In todays world THE EVIL SATANS ARE DIVIDING PEOPLE WITH EVERY IMMAGINARY REASON POSSIBLE!! LOOK AT MR.RAJINI. **** THIS IS WHAT RAJINI MAGIC MEANS **** MR.RAJINIKANT CAN MAKE THE INDIANS AND PEOPLE FROM OTHER COUNTRIES AS WELL TO FORGET ALL THE DIFFERENCES AND SIT TOGETHER IN ONE PLACE ATLEAST FOR 3 HOURS!!!! THIS IS SOMETHING NO OTHER INDIAN CAN DO IN MY OPINION AND THATS THE DEFINITION OF RAJINI MAGIC! AND I AM PROUD OF BEING A RAJINI FAN WHO IS A UNITING FACTOR... I DONT CARE ABOUT THE MONEY INVOLVED, HYPE, WHATEVER IT IS... MR.RAJINIKANT IS A LAW ABIDING CITIZEN WHO PAYS HIS TAXES PROMPTLY, NEVER HURTS , NEVER CHEATS, NEVER LIES, NEVER BULLSHITS FOR HIS OWN BENFFITS,A CLEAN FAMILY ENTERTAINER A KING IN HIS PROFESSION. ......WELCOME TO 2008 AND GET READY FOR 2009!!!! OTHERS BE WHERE YOU ARE (STONE AGE)!! I AM PROUD OF BEING A RAJINI FAN WHO IS A UNITING FACTOR...

Anonymous said...

Friends I am ready to sponsor 100 T-shirts with the Robo still with rose and the following lines on it on the day of Robo release. (I will keep my words.) "யாதும் ஊரே! யாவரும் கேளிர்! அன்பே எங்கள் உலக தத்துவம்" ‍ - "எந்திரன் THE ROBOT"............( with the English translation under the above phrase) can some one pl correct it it its wrong " Every place is home!, Everyone is my family! Love is our language!" "-Endiran THE ROBOT", May be we all can do it together for every world wide fan and give it in every single theater where Endiran the robot will be released.... dear friedns pl voice your thoughts.

Vaanathin Keezhe... said...

OH...what a great news... Thank you friend.
please give me the pics if any, to publish the same!
welldone!

Simple_Sundar said...

http://onlysuperstar.blogspot.com/2008/06/when-superstar-changed-his-outfit-in.html

Anonymous said...

Rajinikku tamil ezhutha padikka theriyuma? sujatha periya novelist sandhehamillai. Avarukkum rajinikkum endha vidhathil inai vaithu paarkka mudiyum? arivu jeevithanathila? Rajiniyin karnataka sothukkalai endha vidhathil alasi aaraindheergal? Enna aadhaaram thandheergal? Verum moondru mani nearam thamizhargalai inaithu vaithaal avar periya thalaivanaha mudiyuma? Sonnadhaiye sollum kilippillaithanam ungal rasigargalukku irundhaal sirandha thondargalaahi vida mudiyaadhu.