Saturday, November 15, 2008

புறக்கணிப்பு: இது காந்திய வழி!

புறக்கணிப்பு குறித்த ரசிகர்களின் கருத்துக்கள், விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளன... அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

வினோ,

முதலில் ஒரு பத்திரிக்கை நடுநிலை என்று எழுதுவதே தவறு.. உதாரணமாக, ஒரு கொலையோ அல்லது தீய செயலோ நடைபெறும் போது இரண்டு பக்கத்துக்கும் பொதுவாக நான் நடுநிலையில் இருக்கிறேன் என்று சொல்லக் கூடாது.. அது தர்மம் அல்ல.

ஆனால் இன்றைக்கு இருக்கும் பத்திரிகைகள் அந்த அளவுக்கு சத்தியத்தை காக்கும் அல்லது உணரும் தகுதியில் இல்லை என்பதால் குறைந்தபட்சம் நடுநிலை அல்லது தவறுக்கு ஆதரவின்மை என்ற நிலையிலாவது இருக்க முயற்சிக்க வேண்டும்..

ஒரு காலத்தில் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் விமர்சிக்காத பத்திரிக்கைகளே இல்லை.. பிற்பாடு அந்த அளவு கடுமை இல்லாவிடினும் கலைஞரையும் விமர்சித்தார்கள் சில பேர்.. பல நேரங்களில் பிஜேபி விமர்சனங்களால் படுகாயப் பட்டது.. ஆனால் இவர்கள் எல்லாருமே நேரடியாக மக்களால் பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, பொது வாழ்வில் இருப்பதால் அவற்றையாவது ஓரளவுக்கு ஞாயப்படுத்தலாம்.

ஆனால், எந்த விதத்திலும் மக்களை பொருளாராத ரீதியாகவோ, அல்லது நம்பிக்கை துரோகமோ செய்யாத ரஜினி போன்ற மனிதர்களை எந்த வித காரணமும் இன்றி கடுமையாக விமர்சிப்பதும் அவதூறு பரப்புவதும் மன்னிக்க முடியாத குற்றம்.

உண்மையிலேயே மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அவர்கள் வருந்த வேண்டும்.. மாதம் ஒருமுறை, இருமுறையாகி பின்னர் வாரம் ஒரு முறையும் இருமுறையாகி விட்டதால் பரபரப்புக்காக ஒரு தனிமனிதனையும் அவர் சுய மரியாதையையும் பலி கடா ஆக்க நினைத்தால் அதன் பலனை அவர்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்..
பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று நினைப்பவர்களை, அவர்களுக்கு பண வரவைக் குறைக்கும் வண்ணம் புறக்கணிப்பது, காந்தீய வழியிலான நேர்மையான செயல்..

இதை சொல்லி விட்டு செய்வதுதான் நிச்சயம் சிறப்பு… நமது முயற்சி வெல்லட்டும்..
பூனைகளுக்கு நிச்சயம் மணி கட்டத்தான் வேண்டும்…

அன்புடன்
அக்னி குமாரன்

No comments: