Monday, November 17, 2008

ரஜினிக்கு பிரபாகரன் பாராட்டு!

ன்னிக் காடுகளில் எதிரொலித்த ரஜினியின் பேச்சு – ரஜினியின் உண்ணாவிரதப் பேச்சு குறித்து இந்த தலைப்பில் சில தினங்களுக்கு முன் நாம் எழுதிய கட்டுரை இது.

இப்படி அப்போது எழுதக் காரணம், தமிழகத்தில் உள்ள முக்கிய ஈழ ஆதரவுத் தலைவர்களிடம் பேசிய எல்டிடிஇ தலைவர் பிரபாகரன், ரஜினியின் பேச்சுக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈழ ஆதரவு ஊடகங்கள் மற்றும் புலிகளின் பிரதான இணைய தளங்கள், பத்திரிகைகளில் இந்தச் செய்தி பிரதானமாக இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

இதோ இப்போது, ரஜினியின் பேச்சுக்கு பிரபாகரன் தெரிவித்த பாராட்டை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன்.

பூநேரி முகாம் வீழ்ந்ததுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘முப்படைகளை வைத்துக் கொண்டு 30 ஆண்டுகளாக யுத்தம் செய்யறீங்க... உங்களால் அவங்களை (புலிகளை) ஜெயிக்க முடிஞ்சதா... உங்க தோல்வியை ஒத்துக்கிட்டு, அவர்கள் மண்ணை திருப்பித் தந்துவிடுங்கள்... என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதன் மூலம், எமது மண்ணின் கள யதார்த்தத்தை, அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

இங்குள்ள ஒவ்வொரு தமிழரும் வீரத்தை வெளிப்படுத்தியபடி, தியாகங்களைப் புரிந்தபடி போராடி வருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக எங்களுடைய சுதந்திரத் தீயை அணையவிடாது பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம்...’ என தனது அஎறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் நடேசன்.

சமீபத்தில் இலங்கை ராணுவத்தில் குண்டு வீச்சில் பலியான தமிழ்ச் செல்வனுக்குப் பின் அவரது இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.envazhi.com

No comments: