Tuesday, November 25, 2008

‘அட, மெய்யாலுமே ரூம் போட்டு யோசிக்கிறாய்ங்க!’


லங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் பெறும் விதத்தில் பேசியது...

அடுத்த சில தினங்களில் ரசிகர் சந்திப்பு என்னும் பெயரில் அனைவர் மனங்களையும் கொள்ளை கொண்டது...

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல, ஈழ மக்களின் கண்ணீர் துடைக்க ஒரு முன் முயற்சியாக இருக்கட்டும் என்ற நோக்கில் தன் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாமென ரசிகர்களுக்கு கட்டளையிட்டு, அறிக்கை விட்டது...

இப்படி டெண்டுல்கர் 20 ஆண்டுகள் அடித்த ஸ்கோர்களை இரண்டே வாரங்களில் சூப்பர் ஸ்டார் மொத்தமாய் அள்ளிவிட, நம்ம உள்ளூர் ஸ்டார்களுக்கு ஜுரமே வந்துவிட்டது. அந்த ஜுர வேகத்திலேயே நாமும் ஏதாவது செய்தாக வேண்டுமே என, அடுத்து கட்சி ஆரம்பிக்கக் காத்திருக்கும் கோலிவுட் ‘தலைவர்கள்’ மாலை நேர பார்ட்டிகளில் ஆலோசனை செய்து வருவதாகக் கேள்வி!

இவர்களுக்கு ஒரே பிரச்சினை... ரஜினியை எப்படி ஓவர்டேக் செய்வது. அட ரஜினியை ஓவர்டேக் பண்ண முடியலைன்னாலும் பரவாயில்லை... அவர் ரசிகர்களை எப்படி ஓவர் டேக் பண்ணுவது.... தனித்தனியாய் யோசித்துப் பார்த்து ஒண்ணும் வேலைக்காகவில்லை.
‘ரூம் போட்டு’ யோசித்தால் ஒருவேளை ஏதாவது ஐடியா வருமோ என யோசித்ததன் விளைவு, விஜய்காந்தின் லீக் கிளப்பில் ரூம் ரெடி.

அல்டிமேட் ஸ்டார் அஜீத், ஸ்டாலின் இளவல் (அட.. அதாங்க இளையதளபதி!) விஜய், தம்மாத்துண்டு ஸ்டார் சிம்பு, திடீர் நாயகன் ஜேகே ரித்தீஸ் என ‘தலைவர்கள்’ உச்சி மாநாட்டுக்குத் தயாராகிறார்கள்.

இவர்களுடன் மைனஸ் ஸ்கோரில் நொண்டியடித்துக் கொண்டிருக்கும் விஜய்காந்தும் சேர்ந்து கொள்ள, கச்சேரி களை கட்டுகிறது!

வி.காந்த்: வாங்க தம்பிங்களா... உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா... தமிழ்நாட்டுல இருக்கிறது ஏழு கோடி பேரு. அதுல மூணே முக்கால் லச்சம் ஆண்கள், மூணே கால் லச்சம் பெண்கள். ரெண்டரை லச்சம் ஆண் வாக்காளர்கள்...

விஜய் (அஜீத்திடம்): அடடா... வந்துட்டாரு, சென்சஸ் பார்ட்டி. இந்தாள பேச விட்டோம்னா... பேசியே நம்மை டயர்டாக்கிவிடுவாரு. சீக்கிரம் ஏதாவது உருப்படியான ஐடியா இருந்தா அவுத்துவிட்டு ஆஃப் பண்ணுப்பா அந்தாளை...

அஜீத் (தனக்குள்): ஆமா... இவனும் இவங்கப்பனும் புது நடிகர்களுக்கு வளரும்போதே உஷாரா ஆப்பு வைப்பாங்க. அது இந்தாளுகிட்ட வேகலை போலிருக்கு.
(பின்னர் சத்தமாக...) ஜோசப்... எனக்கும் அவருக்கும் சிங்கப்பூர்லருந்தே செட் ஆகல... என்னெக் கேட்டா ஸினமாவ ஸினமாவா இருக்க விடணும்... இத இப்போவே சொல்லிட்டு வெளிநடப்பு செய்ட்டா... அது!

விஜய்: நேரங் காலம் தெரியாம ‘அது... அது’ன்னு சொல்லாதய்யா... எல்லாரும் என்னவோ ஏதோன்னு பார்க்கப் போறாங்க. ஜனங்க கிட்ட ரஜினிய விட அதிகமா பேர் வாங்குற மாதிரி உருப்படியா ஏதாவது சொல்லு...

விஜய்காந்த்: (இன்னமும் தொடர்கிறார்...) அதனால இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்காக பாண்டிச்சேரில ஒரு மாநாடு நடத்தப் போறேன். இந்த ஒரே மாநாட்டுல மொத்த ஓட்டும் அள்ளிடப் போறேன். தவறாம நீங்கள்லாம் கலந்துக்கணும். ஆனா நமக்குள்ள எந்தக் கூட்டணியும் கிடையாது. கண்டிப்பா எல்லாம் வந்துடுங்க... தவறாம நின்னு என்கூட போட்டோ எடுத்துக்கணும். அப்பத்தான் ஒரு ‘இதுவா’ இருக்கும். போட்டோகிராபர் தயாரா வச்சிருக்கேன். தம்பி விஜய், அப்பாட்டச் சொல்லிடு... வரும்போது... வேணாம்... நீ மட்டும் வந்தா போதும்!

விஜய்: ண்ணா... நீங்க பாண்டிச்சேரில மாநாடு நடத்துற ரகசியம் தெரிதுங்ணா... உங்க இளைஞரணிக்காரங்க மெட்ராஸ கொஞ்சமா நாறடிச்சிட்டாங்கன்ற கோபத்துல, பாண்டிச்சேரிக்கே கூட்டிட்டுப் போற உங்க குணம் யாருக்குங்ணா வரும். நமக்கு நேரா சிஎம் சீட்டுக்குப் போயிடணும். அதானுங்கணா ஒரே ஆசை!

நானும் ரெண்டு உண்ணாவிரதம் இருந்துப் பார்த்துட்டேன். ஒண்ணும் வேலைக்காகல... ரஜினி பேசுனா அதைச் தலைப்புச் செய்தியாக்கி வன்னிக்காடு வரை ஓட விடறாங்க. நம்ம உண்ணா விரதத்தை இந்த பரங்கிக்காடு கூட தாண்ட விட மாட்டேங்குறாங்க. இந்தப் பத்திரிகைக்காரனுங்களுக்கும் ஏகப்பட்ட லொள்ளு. படத்தையெல்லாம் போட்டு கூடவே கேவலமா கமெண்ட் வேற... தந்தி குடுக்கச் சொன்னா காமெடியாக்கிட்டாங்ணா...

ஒண்ணுமே புரியலைங்ணா... இந்த கூட்டத்தை நம்பி மாவட்டம் மாவட்டமா கல்யாண மண்டபம் கட்டிக்கிட்டு வரேன்... செந்தூரப் பாண்டியான நீங்கதான் நமக்கும் ஒரு வழி சொல்லணும்...

வி.காந்த்: அய் அஸ்கு புஸ்கு... சாட்சின்னு ஒரு படம் எடுத்துட்டு, அதை வெச்சியே எங்கிட்ட டப்பா படத்துக்கெல்லாம் கால்ஷீட் வாங்கி உங்கப்பா சம்பாதிச்சாரு. இது சினிமா இல்லப்பா... இலவச ஐடியாவெல்லாம் வேலைக்காகாது. ஒவ்வொரு ஐடியாவுக்கும் பண்ருட்டிக்கு நான் கொடுக்குற வெலை இருக்கே... அதுக்காக பிரேமா கிட்ட நான் படற பாடு உனக்கெங்க தெரியப் போகுது.

விஜய்: அது என்னங்னா... ஒகேனக்கல் உண்ணாவிரதம்னாலும் ரஜினிதான் பின்றாரு... இலங்கைத் தமிழர் உண்ணாவிரதம்னாலும் அந்தாளுதான் கடைசில ஜெயிக்கிறாரு... அட ரசிகர்கள் கிட்டயாவது கெட்ட பெயரெடுப்பார்னு பார்த்தா... ரசிகர்களுக்கு பதில் சொல்ற சாக்கில நம்ம பொழப்பை காலி பண்ணிட்டாரு. என்ன மாயம் பண்ணார்னே தெரியல... ஒரு மணி நேரத்துல அவர்தான் கடவுள்னு தூக்கி வெச்சிக்கிட்டு ஆடறாங்க.

ஒரு பேப்பரையும் திறக்க முடியல. எதுல பார்த்தாலும் ரஜினி புராணம்... என்னால முடியல...முடியல... தாங்க முடியல... நாம ஒரு தட்ல சாப்பிட்டு வளர்ந்தவங்க இல்லையா... நீயாவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா அஜீத்!

அஜீத்: அட புலம்பாதய்யா, பேச்சைக் குறை... என்னைப் பொறுத்தவரை... சினிமா வேற... மத்ததெல்லாம் வேற வேற. இப்பதான் அவங்களும் (ரஜினி ரசிகர்களும்) என்னை போனா போகட்டும்னு விட்டிருக்காங்க. இந்த நேரத்துல இது தேவையா எனக்கு... அய்யோ...இதெல்லாம் தெரியாம வந்திட்டேன் நான். எனக்கு விஷ்ணுவர்தன் கூட அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கு. பிரபு வரச் சொல்லியிருக்கார். வர்ட்டா... (கிரேட் எஸ்கேப்)!

சரியாக அந்த நேரம் பார்த்து என்ட்ரி கொடுக்கிறார்கள் சிம்புவும் (கூடவே சினேகா உல்லல்!) ரித்தீஸூம்!

சிம்பு: என்ன பண்றதுண்ணே தெரியல விஜய். லிட்டில்னு எந்த நேரத்துல எங்கப்பன் வச்சான்னே தெரியல. இன்னும் லிட்டில் லிட்டிலாவே போய்க்கிட்டிருக்கேன். லைப்ல ஒரு மாற்றமும் இல்லை. எனக்குன்னு எங்கப்பன் ஆரம்பிச்ச கட்சியும் என்னை மாதிரியே லிட்டிலாதான் இருக்கு...

விஜய்: வாடா வம்பு வாயா... புள்ளையாரே எலுமிச்சம் பழத்துக்கு சிங்கியடிக்கிறாராம். இதுல சுண்டெலிக்கு ஆப்பிள் கேக்குதா! போடா...போய் அப்படி ஓரமா குந்து...
சிம்பு: ண்ணேய்... நான் ஓரமா உக்கார்ற ஆளுல்ல... உங்களையே அசத்தப் போற ஆளு. பவர்ல தேளு. நான் சொல்றதக் கேளு...

வி.காந்த்: ஏம்பா விஜய்.... இந்தப் பையன் எப்படி உங்கப்பாகிட்டருந்து தப்பிச்சான்... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல... அவர்ட்ட சொல்லி எப்படியாவது இவன் கால்ஷீட்ட வாங்கிடச் சொல்லு. ஒரு எதிர்கால அரசியல் கட்சி ஒழிஞ்சதுங்கிற நிம்மதியாவது மிச்சமாகும்!

சிம்பு: திருநெல்வேலிக்கே அல்வாவா... இந்த சிம்புவுக்கே சொம்பா... அதெல்லாம் நடக்காதுண்ணே... இந்த விசயத்துல நான் எங்கப்பன் கிட்டேருந்தே நைசா தப்பிச்சிட்டேன். எஸ்ஏசி கிட்ட மாட்டுவனா...

விஜய்: சரி.. சரி... சாமியாடனது போதும்... பிளானச் சொல்லு!

சிம்பு: இப்ப என் டார்கெட்ல மூணு புது ஹீரோயின்ஸ், ரெண்டு ‘ஆன்ட்டி’ ஹீரோயின்ஸ் இருக்காங்க. அவங்களோட டிஸ்கஷன் முடிஞ்சதும் முழு வீச்சுல இறங்கிட வேண்டியதுதான்... லட்சிய திமுக பேரை மாத்திட்டு, சிம்பு திமுகவாக்கப் போறேன். நம்ம கட்சி லேடீஸ் ஸ்பெஷல்... புல்லா ஃபீமேல்ஸ்தான்... என்னைத் தவிர நோ மேல்ஸ்!

வி.காந்த்: சரிப்பா... போய்ட்டு வா. உன்னை ஏதாவது ஒரு ஆஸ்பத்திரில பாத்துக்கிடறேன்!
ஜே.கே.ரித்தீஸ்: யண்ணே... ரஜினிய விடுங்க. நாம தனி ரூட்ல போலாம். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கண்ணே... எனக்கு தனியா கச்சி நடத்தி பளக்கமில்லண்ணே... நீங்க ஒப்புக்கிட்டா... சுதீஷ் இடத்துக்கு வந்திடறேன். மொத்தச் செலவையும் நான் பாத்துக்கிடறேண்ணே... ஆச்சி மாறும்போது நான் உங்கக்கிட்டயிருந்தா ஸேப்பா இருப்பேண்ணே...

வி.காந்த்: தம்பி நல்ல யோசனதான்... ஆனா அதுல முடிவெடுக்கிற அதிகாரம் என்கிட்ட இல்லே. கேட்டுச் சொல்றேன். ஆனா, சுதீஷ் இடத்துக்கு வர்றதா சொல்லி, நாயகன் படத்துல ரமணாவக் காலி பண்ண மாதிரி வேலையில இறங்கினா நான் என்ன பண்ணுவேன்... உன் கேஸ் கொஞ்சம் சந்தேகமால்ல இருக்கு!
ரஜினியை மிஞ்சற மாதிரி ஏதாவது தடாலடியா ஒரு யோசனை சொல்லுப்பா... மத்ததை பிறகு பேசிக்கிடலாம்!

ரித்தீஸ்: சரிண்ணே... ஆனா ரஜினி மேட்டர் வேணாம்னே. பளக்க தோசத்துல ‘ரஜினி வாள்க’ன்னு கோஸம் போட்டாலும் போட்டுடுவேன்.
உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நீங்க கச்சி நடத்துறது எதுக்கு... சம்பாதிக்கத்தானே... நான் வேணா ஒரு ஆயிரம் கோடி கொடுத்திடறேன். பிரேமா அக்காவையும், சுதீஷையும் நீங்க வச்சிக்கிட்டு கச்சியை எங்கிட்ட குடுத்திடுங்கண்ணே... கஸ்டப்படாம காசு பார்த்தா மாதிரி இருக்கும்.

வி.காந்த்: இந்த சில்லுண்டி வேலைய விருத்தாசலம் எம்எல்ஏகிட்ட வெச்சுக்காதப்பு... கெளம்பு கெளம்பு...

விஜய் (தனக்குள்): நாமதான் ரஜினியை ஓவர்டேக் பண்ண பாயைப் பிறாண்டிக்கிட்டு இருக்கோம்னா... இவரு கேஸ் நம்ம விட மோசமா இருக்கும் போலிருக்கே... கட்சி ஆரம்பிச்சாலும் இதே நிலைதானா...

வி.காந்த் (தனக்குள்): எல்லாப் பயலும் நம்ம பார்க்கும் போதெல்லாம் என்னமோ கேப்டன் கேப்டன்னும் நெஞ்சை நக்குறாங்களேன்னு பாத்தா... எல்லாம் நம்ம பங்காளிகளாவே இருக்கானுங்களே... ரஜினியை மிஞ்ச உருப்படியா ஒரு ஐடியா கொடுக்கத் துப்பில்ல...

அட ரஜினி சும்மா இருந்தாலும் இந்த ரசிகர்களும் அரசியல்வாதிகளும் விடமாட்டேங்கறாங்க. கூட்டணி வெச்சுக்க ரெடின்னு, எத்தனை முறைதான் இந்த பிஜேபிக்கு சொல்லிவிடறது...

ஆனா இந்த அத்வானி நேரா போயஸ் கார்டன் போய் ரஜினியப் பார்த்தா, அப்புறம் ஒரு பய நம்மை மதிப்பானா! அந்தாள சினிமாவுல எந்தக் காலத்திலும் ஓவர் டேக் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சிதான் முன்கூட்டியே அரசியலுக்கு வந்தேன். இப்ப இங்கேயும் வரேங்கிறாரு. அடுத்து நான் எங்கதான் போறது?

விஜய்: சரிங்ணா... நம்மள இந்த பத்திரிகைக்காரங்கதான் நல்ல ஐடியா கொடுத்து காப்பாத்தணும். அடுத்த மீட்டிங்குக்கு ஆவி, அஞ்ஞானி, தினப்பொய்மலர், கோயபல்ஸ் சன் குரூப், இத்துப்போன எக்ஸ்பிரஸ்னு ஒரு குரூப்பை பிடிச்சிடலாம். கண்டிப்பா கிரிமினல் ஐடியாக்கள் நிறைய கிடைக்கும். அதுவரைக்கும் கச்சிய பாத்துக்கங்ணா... வர்ட்டா...

வி.காந்த்: யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பார்க்கும்னு சொல்றது இதானா... சரி... உருப்படியா ஒரு யோசனை சொல்லியிருக்கே. இல்லாததையும் சரியா இட்டுக் கட்டி லாஜிக்கோட எழுதறவங்க அவங்கதான். கூட்டிட்டுவா... பேசலாம்!

இருவரும் மனதுக்குள் வன்மமும் வாய் நிறைய புன்னகையுமாய் கலைகிறார்கள்!

அடுத்த பகுதி தொடரும்... ஆனா, ஒரு வாரம் கேப் கொடுங்க... (இத்தனை பொய்யர்களையும் ஒண்ணா சேர்க்கணும்ல!)

-வினோஜாஸன்

http://www.envazhi.com

3 comments:

Anonymous said...

Vino, kalakkuringa ponga...

Anonymous said...

Super! Matternna, I just laughed,laughed like hell out of me.Too good Vino.

Vaanathin Keezhe... said...

Thanks to Anony..., Napoleon S Kumar!