Tuesday, November 18, 2008

மீடியாவின் எல்லை மீறிய செயல்! - சத்யநாராயணா

ன்றப் பொறுப்பாளர் பதவியிலிருந்து சத்தியநாராயணா நீக்கம், புதிய தலைவராக சுதாகர் நியமனம் என்றெல்லாம் இரு தினங்களாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

உண்மையில் நடந்தது என்ன?

சத்தியநாராயணா மீது ரஜினிக்கு உண்மையிலேயே அதிருப்தியா... அவர் தனக்கென்று தனி கோஷ்டி சேர்க்கிறார் என்பது உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வெறும் யூகங்களின் அடிப்படையில் ‘அவல்’ தர முடியாது.
எனவே இதுகுறித்த தீவிர விசாரணையில் இறங்கினோம். முதலில் ராகவேந்திரா மண்டப பொறுப்பாளர்கள் சொன்ன தகவல்:

“சத்தி சார் நீக்கப்பட்டார் என்று ரஜினி இதுவரை எங்கும் சொல்லவில்லை. எந்த அறிக்கையும் விடவும் இல்லை. ஏற்கெனவே சத்திக்கு கொஞ்சநாள் ஓய்வு தர வேண்டும் என்று ரஜினி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் உடல் நலக் கோளாறு. மறுபக்கம் தாயை இழந்த சோகம். இப்போது வயதான தந்தையைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு.

தாய் தந்தைக்குத்தான் முதலிடம் என்று அடிக்கடி சொல்வார் ரஜினி. எனவேதான் இப்போது சத்திக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ரஜினி ரசிகர் மன்றத்தின் எந்த முடிவாக இருந்தாலும் அதை ரஜினிதான் முதலில் சொல்ல வேண்டுமே தவிர மீடியா இஷ்டத்துக்கு சொல்லவிட முடியாது... சத்தி எப்போதும்போல இந்த குடும்பத்தின் ஓர் அங்கம்தான்...”

இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்லக் கூடிய இருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. மற்றொருவர் சத்தியநாராயணாதான். மிக நீண்ட முயற்சிக்குப்பின் சத்தியைத் தொடர்பு கொண்டோம். நேரில் சந்திக்கக் கேட்டபோது, ‘இப்போது வேண்டாமே’ என்றவர், தனது நிலை குறித்து சுருக்கமாக கருத்து சொல்லி முடித்துக் கொண்டார்.

எனக்கு உடல் நலம் சரியில்லை. ரெஸ்டில் இருக்கிறேன். ரஜினி சாரே என்னை ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். சார் அடிக்கடி சொல்வார்... ஏம்பா இவ்ளோ கஷ்டப்படற... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ, என்பார். இப்போது சில வாரங்கள் ஓய்வுக்காக வீட்டிலிருக்கிறேன். அதற்குள் மீடியா இப்படியெல்லாம் கதை எழுதுவது வேடிக்கையாக உள்ளது.

நான் விடுமுறையில் போனால், அந்த வேலையை இன்னொருவர் கவனித்துக் கொள்ளமாட்டாரா... அப்படித்தான் நண்பர் சுதாகர் இப்போது பார்த்துக் கொள்கிறார். அதற்குள் நான் ராஜினா செய்துவிட்டேன் என்றும், வேறு சில வேண்டாத கோணத்திலும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

நேற்றிலிருந்தே ரசிகர்களின் போன் கால்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இன்று இன்னும் அதிகம்.

இந்தச் செய்திகளைப் படித்துவிட்டு, சாரே கோபப்பட்டார். ஒரு விஷயம் கேள்விப்பட்டால் குறைந்தபட்சம் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூட மாட்டார்களா பத்திரிகைக்காரர்கள்...! இது அவர்களின் எல்லை மீறிய செயல்...” என்றார்.

No comments: