Friday, November 7, 2008

விகடன், தினமலர் குழும இதழ்களைப் புறக்கணிப்போம்!

லைவர் மீடியாவுக்குத் தரும் மரியாதையைப் பற்றி பெரிசாக எழுதினீர்களே, அதற்கு அவர்கள் திரும்பக் காட்டும் மரியாதையைப் பார்த்தீர்களா? என நிறையப்பேர் கேட்கிறார்கள்.

ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம், தினமலர், எக்ஸ்பிரஸ், டைம்ஸ் என பல பத்திரிகைகள் ரஜினி நடத்திய இந்த நேர்மையான ரசிகர் சந்திப்புக்கு உள்ளர்த்தம் கற்பித்து வருகின்றன.

ஆனால் இவர்களில் ரஜினி எதிர்ப்பில் இப்போது மிகவும் தீவிரம் காட்டத் துவங்கியிருப்பது விகடன் குழுமம். இந்த லட்சணத்தில் ரஜினி ரசிகர்களிலேயே கூட நிறையப்பேர் காலிப் பெருங்காய டப்பா விகடனின் நடுநிலைத்தனத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்.

எந்த வித சமூக அக்கறையும், குறைந்தபட்ச தொழில் நேர்மையும் கூட இல்லாத விகடன், எந்திரன் திரைப்படத்தை ஓட்டுவதற்காகத்தான் ரஜினி இந்த சந்திப்பை மேற்கொண்டார் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை சின்னப்புள்ளத்தனமாக கூவிக் கொண்டிருக்கிறது. அதன் கொடுக்கு ஜூவியிலும் இதே பல்லவிதான்.

பஞ்சமா பாதகர்கள் என தமிழில் உள்ள சொல்லுக்கு புதிய விளக்கமாக விகடன் குழுமம் என்று போட்டுக் கொள்ளலாம்.

இவர்களை இன்னும் எத்தனை முறை திட்டுவது... இவர்களின் திருட்டுத்தனங்களை இன்னும் எத்தனைமுறை அம்பலப்படுத்துவது...

இவர்கள்தான் திருடர்கள் என்று புரிந்துவிட்டதல்லவா... இனி புறக்கணியுங்கள்.

புறக்கணிப்பது முடியாத காரியம் என்று யாரும் சொல்லாதீர்கள். என்ன எழுதினாலும் அதைப் படித்து திட்டவாவது ஒரு கூட்டம் இருக்கிறதே என்ற துணிச்சலில்தான் அவர்கள் ரஜினி என்ற மனிதனின் சமூகப் பொறுப்புணர்வைக் கூட மதிக்காமல் எந்த எல்லைக்கும் போகத் துணிந்திருக்கிறார்கள்.

எப்போது விஜய்காந்த் என்ற அரசியல்’வியாதி’யின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாக விகடன் குழுமத்தினர் மாறிவிட்டார்களோ, அப்போதே தங்கள் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் தொலைத்துவிட்டு கேவலமாக நிற்கிறார்கள்.

இலங்கை இனப் பிரச்சினைக்காக உண்ணாவிரதமிருந்த ரஜினி இறுதியில் அனைவரது மனங்களையும் வெல்லும் விதத்தில் நிகழ்த்திய எழுச்சியுரையைக் கேட்டு மேடையிலேயே அவரைக் கைகுலுக்கி தோளில் தட்டி தன் பாராட்டைத் தெரிவித்து, சரணாகதிப் படலத்தை ஆரம்பித்து வைத்தார் சத்யராஜ். இது உலகறிந்தது.

ஆனால் போட்டோ கமெண்ட் எனும் பெயரில் அந்தப் படத்துக்கு ஜூவி கக்கியிருக்கும் விஷம் ஒன்றே போதும், விகடன் குழுமத்தினர் எந்த மாதிரி இழி பிறவிகள் என்பதைப் புரிந்து கொள்ள.

விகடன் இந்த அளவு கதிகலங்கிப் போய் ரஜினிக்கு எதிராக பிதற்றுவதற்கு இன்னொரு காரணம், அவர்கள் இதுவரை கிண்டலடித்து வந்த அனைத்து விஷயங்களையும் ரஜினி ஒரே சந்திப்பில் தவிடு பொடியாக்கி விட்டதுதான்.

ரஜினி குழப்பவாதி

ரஜினி சுயநலவாதி

அரசியல் ஆசை காட்டி ஏமாற்றுகிறார்...

இப்படி விதவிதமான பொய்களை அடுக்கி அட்டைப் படக் கட்டுரைகளாகப் போட்டு, ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினரைச் சுரண்டி வந்தனர் இந்த விஷமிகள்.

ஆனால் ரஜினி ஒரே சந்திப்பில் தனது சமூகத்தையும் பொதுமக்களையும் தெளிய வைத்துவிட்டார். இனி என்ன சொன்னால் ரசிகர்களைச் சுரண்ட முடியும் எனத் தெரியாமல் ஜுர வேகத்தில் பிதற்றிக் கொண்டுள்ளனர்.

இன்னொரு பக்கம், அயோக்கியத்தனத்தில் விகடனுக்கு தான் சற்றும் சளைத்ததல்ல என முழங்கியபடி வரும் பொய்மலர்...தினமலர்.

ஏற்கெனவே மீடியா உலகில் மானங்கெட்ட பத்திரிக்கை என்ற பெயரைச் சம்பாதித்துள்ள இந்த தினமலர் கும்பல் முழுமையாக அழியும் காலம் நெருங்கி வருகிறது. அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டியதில்லை. தினமலர் பார்ட்னர்களே செய்து வருகின்றனர்!

ரசிகர்கள் மனநிலைப் புரிந்து அவ்வப்போது பாராட்டு, அவ்வப்போது விமர்சனம் என காலத்தை பாதுகாப்பாக ஓட்டிக் கொண்டிருக்கின்றன குங்குமம், குமுதம் குழுக்கள்.

ரஜினி சொன்ன குருவும் தேளும் கதையெல்லாம் இந்த சந்தர்ப்பவாதிகளுக்குப் புரியாது.

தேள் கொட்டுகிறதா... பார்த்தவுடனே அடித்துக் கொல்லுங்கள் அதை..!

கடமையைச் செய்; பலனை எதிர்பார் என புதிய வேதம் சொன்னவரின் ரசிகர்கள் கடைப்பிடிக்க வேண்டியது இனி இந்த அதிரடியைத்தான்!

அதை விட்டுவிட்டு சும்மா புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!

-SS

http://www.envazhi.com

1 comment:

குப்பன்.யாஹூ said...

விகடனை புறக்கணிப்போம்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் விகடன் இணைய தளத்திற்கு சந்தா கட்டாதீர்கள்,
விகடன் அதுவும் கழுகார் எழுதும் பொய் செய்திகள் சொல்லி /எழுதி மாளாது.

நடராசன் சசிகலாவிடம் பணம் வாங்கி கொண்டு வாரா வாரம் அவரை புகழ்ந்து பொய் செய்திகள் எழுதுவது யாவரும் அறிந்ததே.

குப்பன்_யாஹூ