Thursday, December 4, 2008

தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்

சிகர் மன்றங்கள் ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி எந்த வகையான வசூலிலும் இறங்கக் கூடாது, இதில் தலைவர் முன்னெப்போதையும் விட மிகக் கடுமையாக இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நல்ல நோக்கமாகவே இருந்தாலும் கூட, அந்தந்த ரசிகர்கள் தங்களால் ஆன உதவியை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யட்டும். ஆனால் பொது மக்களிடமோ, ரசிகர்களிடமோ எந்தக் காரணம் கொண்டும் ஒரு பைசா கூட வசூல் என்று பெறக் கூடாது.

இந்த வசூல்தான் பல அடிப்படைக் கோளாறுகளுக்குக் காரணமாகிறது. பல அப்பாவி ரசிகர்கள் நல்ல நினைப்பில் தருகிற உதவிகளை, சிலர் தங்கள் சுய லாபத்துக்காகப் பயன்படுத்துவது தலைவர் காதுகளுக்கு வருகிறது. இதனால்தான் இப்போது மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது!

அவருடைய பெயரைப் பயன்படுத்தி செய்யப்படும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது ஏழை மக்களுக்கு சரியான விதத்தில் போய்ச் சேர வேண்டும். அந்த அக்கறைதான் இத்தனை முன்னெச்சரிக்கைகளுக்கும் காரணம். இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!”

-ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் திரு.சுதாகர் அவர்கள் கூறியது.

-எஸ். சங்கர்
Courtesy: www.rajinifans.com

No comments: