Friday, December 5, 2008

பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி

கனை இழந்து கதறிய நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவுக்கு நேரில் போய் ஆறுதல் கூறினார் ரஜினி.

பிரபுதேவா-லதா தம்பதிக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித்தேவா என 3 மகன்கள். மூத்த மகன் விஷால் கடந்த இரு ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தான்.

மருத்துவர்களும் ஏற்கெனவே விஷாலின் மரணம் குறித்து கெடு விதித்து விட்டிருந்தனர். இருந்தாலும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்தான்.

மகன் மீது உயிரையே வைத்திருந்த பிரபு தேவா, அவன் இறந்த துயரம் தாங்காமல் கதறினார்.

கமல் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் விஷால் உடல் மீது வைத்த மலர் மாலைகளை எடுத்து வீசி, என் மகன் இறக்கவில்லை, எனக் கதறினார்.

செய்தி அறிந்ததும் பிரபுதேவா வீட்டுக்கு விரைந்த ரஜினி விஷாலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். துயரமே உருவாய் நின்ற பிரபு தேவாவை அணைத்து ஆறுதல் கூறிய ரஜினி, அவரது தந்தை சுந்தரம் மாஸ்டரிடமும் ஆறுதல் சொன்னார்.
http://www.envazhi.com

No comments: