Friday, December 12, 2008

மனங்களை வென்ற மகா கலைஞனுக்கு வாழ்த்துக்கள்!

லங்கையில் காயம்பட்டுத் துடிக்கும் நம் சகோதரர்களுக்காக இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து விடுங்கள் என்று என்னதான் ரஜினி கூறினாலும், ஏதோ இன்றுதான் தீபாவளி, கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு வந்துவிட்டதைப் போன்ற உணர்வு ரசிகர்களின் மனசுக்குள்...

இன்னொரு பக்கம், ரஜினியின் இந்த பிறந்த நாளுக்காகவே கிடைத்த நல்ல செய்தியைப் போல, இலங்கையில் போர் முனையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லி ஈழ மக்களைத் துன்புறுத்திய சிங்கள ராணுவமே தோற்றுப்போய் ஆயுதங்களை கீழே வீசிவிட்டு புறமுதுகிட்டு ஓடியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஜினியின் வாக்கு பலிக்கட்டும்... ஈழத் தமிழர்களின் மண் அவர்களுக்கு முழுமையாய் கிடைக்கட்டும்.

இந்த பிறந்த நாளில் உலகமே ரஜினிக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்க, அவரோ எங்கோ ஒரு தனிமையான இடத்தில் இந்த தினத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்.
ரஜினி பற்றி கடந்த சில மாதங்களில் சில முக்கிய பிரபலங்கள் கூறியவற்றின் தொகுப்பு இது:

மன்மோகன் சிங், பிரதமர், இந்தியா

‘ஒரு சிறந்த நடிகர், கலைஞருக்கு இந்த விருதைத் தருவதில் பெருமைப்படுகிறேன்.’ (என்டிடிவி விருது விழா)

‘எங்கள் நாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் டான்சிங் மஹாராஜா இங்கே வெற்றி பெற்று இருநாட்டு கலாச்சார உறவுகள் பலப்பட காரணமாக இருந்ததை நினைவு கூறுகிறேன்...’ (ஜப்பான் பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்)

மு.கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு

அன்புத் தம்பி ரஜினி நிஜமாகவே ஒரு உச்ச நட்சத்திரம். வான மண்டலங்களையெல்லாம் தாண்டி, நட்சத்திரங்களைத் தாண்டி சூரியனுக்கு நிகராய் பிரகாசித்துக் கொண்டிருப்பவர். உண்மையிலேயே சூரியனுக்கு அருகில் வீற்றிருப்பவர்.

அவருடைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். புத்தகங்கள், பத்திரிகை வாயிலாக அவரது பழைய வாழ்கைகையும், இப்போது அவர் கடைப்பிடிக்கும் வாழ்க்கையையும் படித்து நான் உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து, கண் கலங்கிப் இருக்கிறேன்.

...வாழ்க அவர் பல்லாண்டு, என்றும் இதே பெருமை, புகழுடன்.

-சிவாஜி வெள்ளி விழா

ஜெயலலிதா, முன்னாள் முதல்வர், தமிழ்நாடு

அன்புச் சகோதரர் ரஜினி ஒரு அரிய கலைஞர். மிகச் சிறந்த மனிதர். வித்தியாசமான நடிப்புக்கு உரியவர். அவர் என்னைப் பாராட்டியதைப் பெருமையாகக் கருதுகிறேன்...(ரீடிப் நேர்காணல்)

எல் கே அத்வானி:

ரஜினியைப் போன்ற மனிதரைப் பார்ப்பது அபூர்வம். அவரது மன உறுதி அசாத்தியமானது. என்னை வியக்க வைக்கிறது.

அமிதாப் பச்சன்:

ரஜினியை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. எப்போதும் என் நலம் விரும்பும் நல்ல சகோதரன். மிகச் சிறந்த பண்பாளர்.

பாரதிராஜா:

மிக அருமையான மனிதன் ரஜினி. அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. பழகியதில்லை. மிக உயர்ந்த குணங்களுக்குச் சொந்தக்காரர். நான் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிடுவேன். பின்னர் பேசியதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன். ஆனால் என்றும் நிதானம் தவறாத மனிதன் ரஜினி.

அடித்த கரங்களுக்கே பூமாலை போடுகிற உயரிய பண்பு அவருக்கு உண்டு. அது எல்லோரிடத்திலும் காணக் கிடைக்காதது... (குசேலன் பிரச்சினையில்...)

வைகோ:

ரஜினியிடம் இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. கடின உழைப்பு, நேரம் தவறாமை, நேர்மை, உறுதியான பேச்சு அனைத்துக்கும் ரஜினியை உதாரணமாகச் சொல்லலாம்.

எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை அவர் கையாளும் விதம் வியப்பைத் தருகிறது. (ரஜினி ரசிகர்களுக்காக வெளியிட்ட அறிக்கை)

இளையராஜா:

ரஜினி மனதளவில் ஒரு துறவியின் வாழ்க்கையை வாழும் உன்னதமான கலைஞர். திரையுலகில் இப்பெடிப்பட்ட அரிய குணங்களுடன் உச்ச நடிகராக இருப்பது சாதாரண விஷயமல்ல. மிக்க் கடினமான உழைப்பாளி. அதற்கான பலன்தான் கடவுள் அவரை வைத்துள்ள உயரம்... (பால் நிலா பாதை)

கமல்ஹாசன்:

ரஜினியைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொல்வதைப் போலத்தான். ரஜினியால் செய்ய முடியாத வேடம் கிடையாது. அவரால் எம்ஜிஆராகவும் நடிக்க முடியும். சிவாஜியாகவும் பிரதிபலிக்க முடியும்.

எங்கள் இருவருக்கும் உள்ள நட்பில் யார் பெரியவர், சின்னவர் என்ற பேதம் கிடையாது. வயதில் அவர் பெரியவர்தான். ஆனால் இருவருக்கும் உள்ள நட்பு வெளிச்ச வட்டத்துக்குள் சிக்காதது (மிட் டே).

டாக்டர் ராமதாஸ்:

ரஜினிகாந்த் நல்ல மனிதர். மிகச் சிறந்த பண்பாளர்... (மாலை மலர்)


தொகுப்பு: வினோஜாஸன்
http://www.envazhi.com

No comments: